அகரமுதலி - அகராதி


அகரம் + ஆதி = அகராதி

ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.

அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.


நிகண்டுகள்:

தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.

நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.

நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.


அகரமுதலி:

திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.


அகராதி நிகண்டு:

நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.

இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.

இது கி.பி.1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.

பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியான பொருள் விளக்கம் இருந்தது.

வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.


பவானந்தம்:

பவானந்தம் (பிள்ளை)  1925ஆம் ஆண்டு "தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்", 1937ஆம் ஆண்டு "மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்" வெளியிட்டார்.


சண்முகம்:

மு.சண்முகம் என்பவரால் "தமிழ்-தமிழ் அகரமுதலி" 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.


தமிழ் லெக்சிகன்:

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி "சென்னைப் பல்கலைக்கழக அகராதி"

இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.

இவ்வகரமுதலி "தமிழ் லெக்சிகன்" என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.


செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி:

1985 ஆம் ஆண்டு "தேவநேயபாவணரது "செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி"யின் முதல் தொகுதி வெளிவந்தது.

இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.

ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

படங்களுடன் வெளிவந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.


கணினி உதவியுடன் அகரமுதலி:

முழுமையான கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி "கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி".

விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.


கலைக்களஞ்சியம்:

தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி அபிதான கோசம்.

இது 1902 ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.

இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.


அபிதான சிந்தாமணி:

1934 ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறை பெயர்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.

இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.


தமிழ் வளர்ச்சி கழகம்:

தமிழ் வளர்ச்சி கழகம் முறையான "முதல் கலைக்களஞ்சியத்தை" தொகுத்து வெளியிட்டது.

இது பத்து தொகுதிகளை உடையது.

இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.


கலைச்சொல் அகரமுதலி:

காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960 ஆம் ஆண்டு தொகுக்கக்கப்பட்டன.

மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


சங்க அகராதி:

"தமிழ்-தமிழ் அகராதி" ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.


பிற அகரமுதலிகள்:

குப்புசாமி என்பவர் "தமிழ்ப் பேரகராதி" வெளியிட்டார்.

இராமநாதன் எனபவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார்.

இந்நூல் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி" எனும் பெயருடன் வந்தது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்