திருக்குறள் | TNPSC Group Exam General Tamil

திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் 
இருபத்தைந்து அதிகாரம் மட்டும்


சிறப்புப் பெயர்கள்:

1. உலகப் பொதுமறை
2. முப்பால்
3. வாயுறை வாழ்த்து
4 பொதுமறை
5. பொய்யாமொழி
6. தெய்வநூல்
7. தமிழ்மறை 
8. முதுமொழி
9. உத்தரவேதம்
10. திருவள்ளுவம்

  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
  • விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்
1. தருமர்
2. தாமத்தர்
3. பரிதி
4. திருமலையர்
5 பரிப்பெருமாள்
6. மணக்குதவர்
7. நச்சர்
8. பரிமேலழகர்
9. மல்லர்
10. காளிங்கர்
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் 
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் தருமர் 
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு

இலத்தின் - வீரமாமுனிவர்
ஜெர்மன் - கிரால்
ஆங்கிலம் - ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
பிரெஞ்ச் - ஏரியல்
வடமொழி - அப்பாதீட்சிதர்
இந்தி - பி.டி.ஜெயின்
தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை
 
திருக்குறள் குறித்த சிறப்புரைகள்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - ஒளவையார் 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்

இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே - பாரதிதாசன்

உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் - கால்டுவெல்

சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் -  காந்தியடிகள்

திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுக்குப் பொது - திரு.வி.க

திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. - கி.ஆ.பெ.விசுவநாதம் 

திருக்குறளின் சிறப்பு

  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
  • இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்