குப்தப் பேரரசு | முக்கியமான குறிப்புகள்

  • மௌரிய பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல்மிக்கதாக உருவானது.

  • ஸ்ரீகுப்தர், குப்தப் பேரரசைத் தோற்றுவித்தார்.
  • சமுத்திர குப்தர் (335 – 375) பல பகுதிகளை கைப்பற்றி, பேரரசை ஒருங்கிணைத்தார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் தனது படையெடுப்புகளின் மூலமும் திருமண உறவுகள் மூலமும் பேரரசை மேலும் விரிவாக்கினார்.

  • குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்.
  • ஸ்கந்த குப்தர் ஹூனர்களை விரட்டியடித்தார். ஆனால் இப்போரின் காரணத்தால் அவரது அரசுக்கு கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டது.
  • குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் படைத்தவர்கள் என்று கூறிக் கொண்டனர்.
  • அவர்களுக்கு அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகள் குழுவும் உதவி செய்தன.
  • குப்த அரசர்கள் கலை, இலக்கியம், அறிவியல், ஆகியவற்றை ஆதரித்தனர்.

  • அவர்களது அவையை காளிதாசர், அரிசேனர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகிமிரர் போன்றோர் அலங்கரித்தனர்.
  • ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்பால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. TNPSC Group IV தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் ?
    2018 வெற்றியாளரின் அனுபவங்களும் போராட்டங்களும்...
    http://www.tettnpsc.com/2018/08/ccse-4-group-iv-exam-tips.html

    பதிலளிநீக்கு