காந்தி-இர்வின் ஒப்பந்தம்
1931 மார்ச் 5 அன்று காந்தி-இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.
காந்தி-இர்வின் ஒப்பந்தம் (Gandhi–Irwin Pact) என்பது 1931-ல் மகாத்மா காந்திக்கும் இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.
இது தில்லி ஒப்பந்தம் (டெல்லி ஒப்பந்தம்) என்றும் அழைக்கப்படுகிறது.
1930 சட்டமறுப்பு இயக்கத்துக்குப் பின்னர் இது ஆங்கிலேய அரசுக்கும் இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான முதல் அதிகாரப் பூர்வ சமரசப்பேச்சு வார்த்தை இதுவாகும்.
மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக இந்தியர்களுக்கு அதுவரை மறுக்கப்பட்ட பல உரிமைகள் திரும்ப அளிக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தப்படி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
ஒப்பந்தத்தில் இந்திய தேசிய காங்கிரசு ஒப்புக் கொண்டவை:
- சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிடல்
- இந்திய வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்றல்
ஒப்பந்தத்தில் காலனிய அரசு ஒப்புக் கொண்டவை:
- சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு கைதான அரசியல் கைதிகளை விடுவித்தல்.
- இந்திய தேசிய காங்கிரசின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அவசர காலச் சட்டங்களையும் விலக்கிக் கொள்ளுதல்.
- உப்பு மீதான வரியை இரத்து செய்து, இந்தியர்களுக்கு உப்பு உற்பத்தி செய்ய அனுமதி அளித்தல்.
- கள்ளுக்கடைகள் மற்றும் வெளிநாட்டுத் துணிக் கடைகளை மறியல் செய்ய காங்கிரசாரை அனுமதித்தல்.
- பறிமுதல் செய்யப்பட்ட சத்தியாகிரகிகளின் சொத்துக்களை திருப்பி ஒப்படைத்தல்.
0 கருத்துகள்