தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியர்கள்

உலகின் முன்னணி நிறுவனங்களின்
தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியர்கள்

சுந்தர் பிச்சை :

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன் இவர், கூகுள் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தலைவராக பதவி வகித்தார்.

இந்திரா நுாயி:

குளிர்பானம் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்புத் துறையில் முன்னணியிலிருக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவராக, சென்னையில் பிறந்த, இந்திரா நுாயி சாதனை படைத்து வருகிறார். இந்திரா, 1994ல், பெப்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

சத்யா நாதெள்ளா:

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் தலைநகராக இருக்கும், ஐதராபாத்தில், பிறந்து வளர்ந்த சத்யா நாதெள்ளா, தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உற்பத்தியில் கோலோச்சி வரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். 1992ல், இந்நிறுவனத்தில் சேர்ந்த சத்யா, 22 ஆண்டுகளில், அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்து சாதனை படைத்தார்.


சாந்தனு நாராயண்:

ஐதராபாத்தில் பிறந்த, சாந்தனு நாராயண், தகவல் தொழில் நுட்பத் துறையில் புகழ் பெற்று விளங்கும், அடோப் நிறுவனத்தின், உலகளாவிய செயல்பாடுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இந்நிறுவனத்தில், 1998ல், சாந்தனு, தன்னைஅர்ப்பணித்துக் கொண்டார்.

ராஜீவ் சூரி:

இந்தியாவில் பிறந்து, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரான, ராஜீவ் சூரி, 'நோக்கியா சொல்யூஷன் அண்ட் நெட்வொர்க்' நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். கடந்த, 1995ல், இந்நிறுவனத்தில் சேர்ந்த ராஜீவ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது தலைமைப் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்