தமிழர் மருத்துவம் | 8TH TAMIL

தமிழர் மருத்துவம்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர்.

அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.

தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.


நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை தெளிவாக விளக்கினர்.

தமிழர் மருத்துவமானது நாட்டு வைத்தியமாகவும், பாட்டி வைத்தியமாகவும், மரபு சார்ந்த வைத்தியமாகவும் சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போனதற்கு காரணங்கள் நம் மீது நிகழ்ந்த படையெடுப்புகள், சமண, பௌத்த மத கலப்பு, ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட அறிவியல் மாற்றம்.

“வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் சித்தர்கள்.

வேர், தழை ஆகியவற்றால் குணம் அடையாத போது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும், பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர் மருத்துவத்தில் “மருந்து என்பது உணவின் நீட்சியாகவே இருக்கிறது”.


தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :

தனித்துவமான பார்வை

சூழலுக்கு இசைந்த மருத்துவம்

சுற்றுச்சூழலை சிதைக்காது

மிக முக்கியமான சிறப்பு : நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான வாழ்வியலையும் சொல்லுகிறது.

“நோய்நாடி நோய் முதல்நாடி” என்றவர் திருவள்ளுவர்.

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்