சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsPKPeqBMGYaXohDGevy7lrBJdhI3SbiXCV3xVBzRXDVBfwTikMoXuwrstDmD3uXXJcZnNftuWx6Ry8QM4Og4uQShSM574ddAZvoyv-3mz8X84OP4UK4l9cXuJRcd2yyVf9Z1uuVrC7W9e-LwVKE8WFn_Ai3hGvdSQyzLm7ilhzAGzkF89DssBTjH9v04/s320/silapathikaaram%20final.jpg)
http://www.tettnpsc.com/ is a site containing TNPSC, TET, Police Exam Study Materials, Model Test Papers, Free online test, TNPSC Group II, Group 2A, VAO, TNTET, Police Exams, TNSURB Exam previous year question papers with answers pdf, TNPSC Group 4 model question paper with answer
திருக்குறள் - TNPSC Group IV General Tamil
ஒப்புரவறிதல்
1. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
2. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.
3. புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.
5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்: மக்களுக்கு பயன்படும் கிணற்றில் நீர் நிறைந்து இருப்பது போல பிறர்க்கு உதவுபவரின் செல்வமும் குறையாது.
6. பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்.
விளக்கம்: ஊர் நடுவே இருக்கும் மரத்தின் பழம் எல்லார்க்கும் பயன்படுவது போல, உதவி செய்பவரின் செல்வமும் பயன்படும்.
7. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
8. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்யும் குணம் உடையவர் தன்னிடம் பொருள் இல்லாத வறுமையாக இருந்தாலும் உதவி செய்ய தயங்கமாட்டார்கள்.
9. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
விளக்கம்: பிறர்க்கு உதவும் இயல்பு உடையவர் உணவு பொருள் இல்லாத நிலையை வறுமை என்று கருதமாட்டார். பிறர்க்கு உதவ முடியாத நிலையை வறுமை என்று கருதி வருந்துவர்.
10. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம்: பிறர்க்கு உதவுவதால் தன் செல்வம் அழியும் நிலை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை விற்றாவது பிறர்க்கு உதவி செய்பவருக்கு புகழ் கிடைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக