மத்திய அரசுத் துறையில் உள்ள போஸ்டல் அசிஸ்டன்ட் பணி


மத்திய அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட SSC (Staff selection commission) எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது மத்திய அரசுத் துறையில் உள்ள போஸ்டல் அசிஸ்டன்ட் பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களில் சேர்வதற்கான தகுதிகள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றுகளையும் முழுமையாக சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ண ப்பிக்க கடைசி நாள்: 15.12.2020.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி, இ.எஸ்.எம் போன்ற மற்ற அனைத்துப் பிரிவு விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்திற்குச் சென்று முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்