Moovalur Ramamirtham Ammaiyar TNPSC Exam Study Notes
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
தேவதாசி குடியில் பிறந்தார்.
தேவதாசி (இசை வேளாளர்) குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன.
ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925ம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார்.
இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர், தாசிகளின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம், தமிழக பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவில் பெண்கள் விழிப்படையச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல், தனது கருத்துக்களை கரும்பலகையில் எழுதி வெளிப்படுத்தினார்.
காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “கதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.
1962ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.
1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை, இவரது பெயரால் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்' தமிழக அரசு வழங்கி வருகிறது.
0 கருத்துகள்