இலக்கணம் — பொது

TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

இலக்கணம் — பொது

இருதிணை 

ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

ஐம்பால்

பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. 

அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்:

வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

மகள், அரசி, தலைவி - பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் - பலர்பால்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்:

அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

எ.கா. யானை, புறா, மலை

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.

எ.கா. பசுக்கள், மலைகள் 

மூவிடம்:

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.

வழு – வழாநிலை - வழுவமைதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்