10th Tamil - திருவிளையாடற்புராணம் (பரஞ்சோதி முனிவர்)
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான முக்கிய தேர்வுக்குறிப்புகள்

நூல் வெளி
- திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
- இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
- பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; சிவபக்தி மிக்கவர்.
- வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.
சொல்லும் பொருளும்
கேள்வியினான் – நூல் வல்லான்
கேண்மையினான் – நட்பினன்
தார் - மாலை
முடி - தலை
முனிவு - சினம்
அகத்து உவகை - மனமகிழ்ச்சி
தமர் – உறவினர்
நீபவனம் – கடம்பவனம்
மீனவன் – பாண்டிய மன்னன்
கவரி – சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
நுவன்ற – சொல்லிய
என்னா – அசைச் சொல்
இலக்கணக் குறிப்பு
கேள்வியினான் – வினையாலணையும்பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
0 கருத்துகள்