சமச்சீர்க்கல்வி - சிறுபஞ்சமூலம்

சமச்சீர்க்கல்வி  9ஆம் வகுப்பு தமிழ்ப்பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற 

சிறுபஞ்சமூலம் பாடக்குறிப்புகள்



கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்
சொற்பொருள்:
கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
வேந்தன் - அரசன்
வனப்பு - அழகு
கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
வாட்டான் - வருத்தமாட்டான்

இலக்கணக்குறிப்பு:
கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் - தொழிற்பெயர்கள்
கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:
  • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
  • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
  • ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன. 

    புதிய தமிழ்ப் பாடப்புத்தகத்தில் (2023-2024) இருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்