- இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.
- வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தை தழுவி கம்பர் தமிழில் இயற்றியதே கம்பராமாயணம் ஆகும்.
- இராமாயணம் ஆதிகாவியம், கம்ப நாடகம், கம்பசித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 118 படலங்கள், 10589 பாடல்களை கொண்டது.
- பாலகாண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்த காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற ஆறு காண்டங்களை உடையது.
- அயோத்தியா காண்டம் 13 படலங்களை கொண்டது.
- பெரும் பிரிவு - காண்டம், உட்பிரிவு - படலம்
- கம்பராமாயணத்தின் பாடல் வகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
- அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் 7ஆம் படலமாகும். குகப்படலத்தைக் கங்கை படலம் எனவும் கூறுவர்.
- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தை இயற்றினார். இது கம்பராமாயணத்தின் 7வது காண்டமாகும்.
- சுந்தர காண்டம் இராமாயணத்தின் முடிமணியாக திகழ்கிறது.
0 கருத்துகள்