Kamba Ramayanam | கம்பராமாயணம் குறிப்பு

  • இராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் இராமாவதாரம். இது கம்பநாடகம், கம்பசித்திரம் எனவும் கூறப்படுகிறது.
  • திருவெண்ணெய்நல்லூர், திருவொற்றியூர் போன்ற இடங்களில் இராமாயணத்தை பாடி, பின்பு திருவரங்கத்தில் அரங்கேற்றினார்.
  • "விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன்" எனக் கூறியவர் - திருத்தக்கத்தேவர்
  • இராமாயணத்தில் இரணியன் வதைப் படலம், மாயாசனகப் படலமும் சிறந்தது.
  • தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது
  • தொல்காப்பிய நெறி நின்றவர் கம்பர். வடமொழிகளை நீக்கி தமிழ்படுத்தியவர்.
  • "யாமறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவனை போல் இளங்கோவை போல்...." என்று பாரதியார் கம்பரை பாராட்டியுள்ளார்.
  • அயோத்தியின் மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர் - ராமன், பரதன், இலக்குவன், சத்ருகனன்
  • கைகேயின் மனதை கெடுத்தவள் மந்தரை
  • தசரதன் மனைவிகள் - கோசலை, கைகேயி, சுமத்திரை.
  • கோசலை - இராமன், கைகேயி - பரதன், சுமத்திரை - இலக்குவன், சத்ருகனன்
  • கைகேயின் வேலையாள் - கூனி
  • திரிசடை - அசோகவனத்தில் காவல் காத்த அரக்கி
  • இந்திரஜித் - இராவணனின் மகன் இவனின் மற்றொரு பெயர் மேகநாதன்
  • சூர்பனகை - இராவணனின் தங்கை
  • தாடகை - சுக்ரிவனின் மனைவி
  • விபிசனன் - இராவணனின் தம்பி
  • கும்பகர்ணன் - இராவணனின் தம்பி
  • மண்டோதரி - இராவணனின் மனைவி
  • குகன் காங்கையாற்றுத் தோணிதுறைக்கும், 1000 படகுகளுக்கும் தலைவன்
  • குகன் சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன்
  • நெடியவன்- உயர்ந்தவனாகிய இராமன்
  • அன்னவன் - குகன்
  • பண்ணவன் - நற்குணங்கள் உடைய இலக்குவன்.
  • இராமன் கோதண்டம் என்னும் வில்லேந்தியவன்.
  • அனுமன் சிறிய திருவடி என்றும்இ சுந்தரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • இராமன் அனுமனிடம் கணையாழியையும், சீதை அனுமனிடம் சூடாமணியையும் வழங்கினர்.
  • திருவடி தொழுதபடலம் உள்ள காண்டம் சுந்தர காண்டம்.
  • திருவடி தொழுதபடலம் என்பது அனுமனுடைய கூற்று.
  • "எல்லாவற்றிலும் இனிய நண்பனே இவ்விடத்தில் என்னுடன் இருப்பாயாக" என்று குகனை நோக்கி இராமன் கூறியது.
  • உத்திரபிரதேசத்தில் பாயும் நதி சரயு.
  • பிறை நிலவு போல் நெற்றி உடையவள் சீதை.
  • தாமரை போன்ற கண்களை உடையவன் இராமன்.
  • இராமன் பிரிவால் அனலிலிட்ட மெழுகுபோல் துன்பமடைந்தவர்கள் அந்தணர்கள்.
  • கற்போருக்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது. பொருள், அணி, நடையால் சிறந்த நூல் கம்பராமயணம்.
  • திருக்குறளும், கம்பராமயணமும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர்கள்.
  • "உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், இராமாயணமும் இருந்தால் போதும் அதனை மீண்டும் புதுப்பித்துவிடலாம்" - கால்டுவெல்.

  • 10th Tamil - தமிழ்ப் பாடத்திலிருந்து  

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்