ஆசிரியர் குறிப்பு
- சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
- இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
- அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
- நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
- அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
- உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.
- இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
- இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
புலி வசனித்த படலம்
- சீறாப்புராணத்தில் “புலி வசனித்த படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = விலாதத்துக் காண்டம்.
சீறாப்புராணம் நூல் குறிப்பு
- இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
- சீறா – வாழ்க்கை, புராணம் – வரலாறு எனப் பொருள்படும்.
- இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது;
- ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.
0 கருத்துகள்