10th Tamil Samacheer | Seerapuranam

10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி சீறாப்புராணம் பாட 
சொற்பொருள், இலக்கணக்குறிப்பு, பிரித்து எழுதுதல்


சொற்பொருள்

தெண்டிரை – தெளிந்த அலைகள்

தடக்கரி – பெரிய யானை

தாரை – வழி

உழுவை – புலி

வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்

வள்ளுகிர் – கூர்மையான நகம்

நிணம் – கொழுப்பு

கிரி – மலை

தொனி – ஓசை

கவை – பிளந்த

எண்கு – கரடி

எழில் – அழகு

இடர் – துன்பம்

மாத்திரம் – மலை

புளகிதம் – மகிழ்ச்சி

பூதரம் – மலை

திறல் – வலிமை

மந்தராசலம் – மந்தரமலை

சிரம் – தலை

உன்னி – நினைத்து

கான் – காடு

திரள் – கூட்டம்

அடவி – காடு

கனல் – நெருப்பு

வனம் – காடு

மடங்கள் – சிங்கம்

கோடு – தந்தம்

உரும் – இடி

மேதி – எருமை

கேழல் – பன்றி

மரை – மான்

புயம் – தோள்

வேங்கை – புலி

கேசரி – சிங்கம்

கவின் – அழகு

தெரிசனம் – காட்சி

புந்தி – அறிவு

சந்தம் – அழகு

செகுதிடுவது – உயிர்வதை செய்வது

தெளிந்தார் – தெளிவு பெற்றார்

இலக்கணக்குறிப்பு

படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம்

தொழுது அறைகுவன் – வினையெச்சம்

நெடுநீர் – பண்புத்தொகை

புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம்

வெள்ளெயிறு – பண்புத்தொகை

முதிர்ந்தமேதி – பெயரெச்சம்

செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை

செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை

வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை

எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம்

சிரமுகம் – உம்மைத்தொகை

புகுக – வியங்கோள் வினைமுற்று

நன்று நன்று – அடுக்குத்தொடர்

நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை

தடக்கரி – உரிச்சொற்றொடர்

பொருந்தி – வினையெச்சம்

கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை

பெருங்கரி – பண்புத்தொகை

பொதிந்தமெய் – பெயரெச்சம்

நின்ற வேங்கை – பெயரெச்சம்

பூதரப்புயம் – உவமைத்தொகை

பெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை

நனிமனம் – உரிச்சொற்றொடர்

உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை

மலரடி – உவமைத்தொகை

கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பிரித்தறிதல்

பணிந்திவர் = பணிந்து + இவர்

சிரமுகம் = சிரம் + முகம்

பெருஞ்சிரம் = பெருமை + சிரம்

தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்

திண்டிறல் = திண்மை + திறல்

எண்கினங்கள் = எண்கு + இனங்கள்

வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்

கரிக்கோடு = கரி + கோடு

பெருங்கிரி = பெருமை + கிரி

இருவிழி = இரண்டு + விழி

வெள்ளெயிறு = வெண்மை + எயிரு

உள்ளுறை = உள் + உறை

நெடுநீர் = நெடுமை + நீர்

அவ்வழி = அ + வழி

தெண்டிரை = தெண்மை + திரை

சீறாப்புராணம் - ஆசிரியர் குறிப்பு

சீறாப்புராணம் - நூல் குறிப்பு


கருத்துரையிடுக

0 கருத்துகள்