கலித்தொகை


திணை  : அகத்திணை
பாவகை  :  கலிப்பா
பாடல்கள் : 150
அடி எல்லை  : 11-80
பாடியோர் : 5

பெயர்க்காரணம்:
கலிப்பா வகையால்பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.

வேறு பெயர்கள்:
கலி
குறுங்கலி
கற்றறிந்தோர் ஏத்தும் கலி
கல்விவலார் கண்ட கலி
அகப்பாடல் இலக்கியம்

தொகுப்பு, உரை, பதிப்பு:

இந்நூலை தொகுத்தவர் : நல்லந்துவனார்.
தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற்கலியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.

நூல் முழுமைக்கும்நச்சினார்கினியர் உரை உள்ளது.
நூலை முதலில் பதிப்பித்தவர் : சி.வை.தாமோதரம்பிள்ளை

கடவுள் வாழ்த்து:

இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடியபெருந்தேவனார்
இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் : சிவபெருமான்

பாடியோர்:
பாலை திணை பாடல்கள்பாடியவர்    :  பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
மருதம் திணை பாடல்கள்பாடியவர்   :  மருதன்இளநாகனார் (36 பாடல்கள்)
நெய்தல் திணை பாடல்கள்பாடியவர்  : நல்லந்துவனார் (33 பாடல்கள்)
குறிஞ்சி திணை பாடல்கள்பாடியவர்  : கபிலர் (29 பாடல்கள்)
முல்லை திணை பாடல்கள்பாடியவர்  : சோழன்நல்லுருந்திரன் (17 பாடல்கள்)

முக்கிய குறிப்புகள்:
  • தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
  • பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் : கலித்தொகை, பரிபாடல்
  • கலித்தொகையின்பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பைபெற்றுள்ளது.
  • பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
  • பாலை திணையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
  • நூல் முழுவதுமேபாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
  • பிற சங்க நூல்களில்கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
  • கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூறியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை.
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே
  • பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
  • காமக் கிழத்திபேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
  • மகா பாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்