மக்களாட்சி
- ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்
தேசிய கட்சிகள்:
- இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகள் தேசியக் கட்சிகள்.
உ.ம் : காங்கிரஸ், பாரதிய ஜனதா
அரசியல் கட்சிகள்:
- ஒருமித்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பே அரசியல் கட்சியாகும். இதை தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என இரு வகையாகப் பிரிக்கலாம்.
- பொதுக் கொள்கைகளை உருவாக்குதல்
- தேர்தலில் போட்டியிடுதல்
- மக்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல்
- அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருத்தல்
- அரசாங்கத்தை நடத்துவது மற்றும் விமர்சிப்பது.
ஒற்றைக் கட்சி முறையின் நன்மைகள்:
- முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
- செலவினங்கள் சிக்கனமாகவும் அமையும்.
- அவசரக் காலங்களில் அல்லது ஆபத்தான காலங்களில் திறமையாகவும், சுதந்திரமாகவும் விரைவில் செயல்பட்டு ஆவணச் செய்ய முடியும்.
- நாட்டின் பெருமைகளை பெருமளவு உயர்த்துகிறது.
ஜனநாயகத்தின் வகைகள்:
- மக்களாட்சி முறை நேரடி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகைப்படும்.
நேரடி மக்களாட்சி:
- மக்கள் நேரடியாக மக்களாட்சி முறையில் பங்கேற்பர்.
- இது பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகத்தில் நடைபெற்று வந்தது.
- பண்டைய இந்தியாவில், கிராமப் பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றன.
மறைமுக மக்களாட்சி:
- இம்முறையில் மக்கள் நேரடியாக பங்கு பெறாமல் தங்கள் பிரதிநிதிகள் மூலம் பங்கு பெறுகின்றனர்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை உருவாக்கி நடத்துவர்.
- பெரும்பாலான நாடுகளில் மறைமுக மக்களாட்சி முறை பின்பற்றப்படுகிறது.
- அரசியல் கட்சிகள் ஆட்சி முறையில் பெரும்பங்கு வகிக்கின்றன.
0 கருத்துகள்