- தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
- இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
- வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.
- பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா.)
உம் - தந்தையும் தாயும்
மற்று - மற்றொருவர்
ஐ - திருக்குறளை
- பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
(எ.கா.)
மா - மாநகரம்
சால - சாலச்சிறந்தது
1 கருத்துகள்
Thank you
பதிலளிநீக்கு