சுற்றுலா அலுவலர் பணிக்கான தேர்வு

தமிழக அரசின் கீழ் செயல்படும் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் என்ற பதவிக்கு 42 காலிப்பணியிடங்களுக்கு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளது.


பணி:
அசிஸ்டெண்ட் டூரிஸ்ட் ஆபீசர் (கிரேடு - II)

மொத்த காலியிடங்கள்: 42

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.08.2019

தேர்வு நடைபெறும் தேதி:
முதல் தாள் (டிராவல் & டூரிசம்): 29.09.2019 (காலை)
இரண்டாம் தாள் (ஜெனரல் ஸ்டடிஸ்): 29.09.2019 (மதியம்)

தேர்வுக்கட்டணம்:
நிரந்தரப்பதிவுக்கான கட்டணம்: ரூ.150
தேர்வுக்கான கட்டணம்: ரூ.100

வயது வரம்பு:
1. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 58 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் தவிர மற்ற பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க... மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற...
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்