உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டை போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் அமித் பன்ஹால், வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜோய்ரோவுடன் அமித் பன்ஹால் மோதினார். இதில், ஜோய்ரோ வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர் அமித்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 45 ஆண்டு கால உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் வெள்ளி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்