பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
காலம் : 25.9.1899 - 23.5.1981
சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் 15 அண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
திரைப்படப் பாடல்களை வருணனையை விட்டுக் கருத்தை நோக்கி நகர்த்தியவர்
உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து “நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் இவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
பாடல்கள்
“போகாதே போகாதே என்கணவா
பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்’’
“பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே’’
“இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படித்தாலும் இந்தத் தமிழ்நாட்டிலே’’
“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது’
0 கருத்துகள்