இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு | வேலு நாச்சியார்

 

வேலு நாச்சியார்   அம்புஜத்தம்மாள்    கடலூர் அஞ்சலையம்மாள்

 

வேலு நாச்சியார்:
  • வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
  • இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
  • இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
    சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
  • ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார்.

  • வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
  • மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.


    இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு |
    கடலூர் அஞ்சலையம்மாள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்