புலவர் : முடியரசன்
இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்பராயலு – சீதாலெட்சுமி
காலம் : 1920 – 1998
நூல்கள் : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்
ஆசிரியர் குறிப்பு
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- இவரின் பெற்றோர் சுப்பராயலு – சீதாலெட்சுமி
- இவர் தமிழாசிரியராக காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார்.
- பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது
- இவரது காலம் 1920 – 1998
“திராவிட நாட்டின் வானம்பாடி” என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்றவர்.‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ என்று தந்தை பெரியாரால் பாராட்பட்டார்இவர் பாதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.இவர் இயற்றிய நூல்கள் பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.பூங்கொடி என்னும் காவியத்துத்க்காக 1966-இல் தமிழக அரசு பரிசு வழங்கியது.சாதி மறுப்பு திருணம் செய்தார்இவரது கவிதைகளை சாகித்ய அகாடமி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளது.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாகும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?
இவ்வரிகள் முடியரசனின் தணியாத தண்டமிழ்க் காதலை வலியுறுத்தும்.
0 கருத்துகள்