பாரதிதாசன் எழுதிய நூல்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளவது எப்படி?
பாரதிதாசன் படைப்புகள் : (with SHORTCUT IDEA)
- இருண்ட வீடு
- அமைதி
- குடும்ப விளக்கு
- மணிமேகலை வெண்பா
- தேனருவி
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- இசை அமுது
- அழகின் சிரிப்பு
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- காதல் நினைவுகள்
- பிசிராந்தையார்
- சேரதாண்டவம்
- புரட்சிக்காப்பியம் (பில்கணியத்தின் தழுவல்)
- இளைஞன்
- கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)
- அமைதி
- தமிழச்சியின் கத்தி
- இளைஞர் இலக்கியம்
- தமிழ் இயக்கம்
- காதலா? கடமையா?
- படித்த பெண்கள்
- இணையற்ற வீரன்
- மானுடம் போற்று
- நல்ல தீர்ப்பு
மேற்கண்ட அனைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது :
SHORT STORY : (SHORTCUT)
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது அழகின் சிரிப்புக் கண்ட பாண்டியன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர (சேர) தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
"இது என்ன கழைக்கூத்தியின் காதல் நாடகமா?" என்றார் நாட்டாமை
இல்லை, அமைதியான தமிழச்சியின் கத்தி என்றாள் மணிமேகலை.
நல்ல இளைஞர் இலக்கியமோ, தமிழ் இயக்கமோ இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறியவாறு இளைஞனிடம் காதலா? கடமையா? என்று கேட்க, "படித்த பெண்கள்" என்று கூறினான் அந்த இளைஞன்.
நீதான் இணையற்ற வீரன், உன்னை இந்த மானுடம் போற்றும் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.
Shortcut by Natraj's Tnpsc Shortcuts
1 கருத்துகள்
நெய்தல் -2023 வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குபாரதிதாசனின் நூல்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய இனிய கதைசொல்லும் முயற்சியை வரவேற்கிறோம்.
அ.இருளப்பன்-9942470199
தலைவர்/தொல்காப்பியர்மன்றம் -மதுரை