Sirpa Kalai
- கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
- "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவைபத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன" என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.மணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன. - சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.
1) முழு உருவச் சிற்பங்கள்
2) புடைப்புச் சிற்பங்கள்
முழு உருவச் சிற்பங்கள் :
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
புடைப்புச் சிற்பங்கள்:
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். இத்தகு சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம்.
கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். இத்தகு சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம்.
கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.
தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.
- சிற்பிகள் `கற்கவிஞர்கள்’ எனப்படுகின்றனர்.
- தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
- போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.
- சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.
- மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.
பல்லவர் காலச் சிற்பங்கள்
- பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
- பல்லவர் காலச் சிற்பக் கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.
- மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பஞ்ச பாண்டவர் இரதங்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
- காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.
- காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
- பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
- மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன.
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)
0 Comments