உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பிரபுதேவா பேசுகிறேன்.
இந்த CCSE-4 தேர்விற்கு என்று நான் கடினமாக உழைத்தேனே தவிர மாநில அளவில் முதலிடம் வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
நான் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் ஒரு தறி தொழிலாயின் மகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருபவன்.
பள்ளியில் பயிலும் பொழுது படிப்பில் இருந்த மிகுந்த ஆர்வம் பின்னர் கல்லூரி வாழ்க்கையில் சற்று குறைவாக இருப்பதாக உணர்ந்தேன்.
நான் ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். பின்னர் பொறியியல் கணினியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
பள்ளியில் பயிலும் போது நடிகர் திரு. சூர்யா அவர்கள் நடித்த சிங்கம் படம் பார்க்க நேர்ந்தது, அதனால் IPS பணியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
எனது அரசு வேலை கனவு தொடங்கிய இடம் திரை அரங்கம் தான். ஆனால், அந்த கனவினை லட்சியமாக, அந்த இலட்சியத்தை உழைப்பாக அந்த உழைப்பினை கடின உழைப்பாக மாற்றி தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.
இன்று வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பத்திரிக்கை பேட்டிகள் என்று எனது நாட்கள் கழிந்து கொண்டு இருக்கிறது.
நான் எனது தந்தைக்கு தொழிலில் உதவி செய்து கொண்டு கிடைக்கிற நேரம் படித்து வெற்றி பெற்றவன். இடையில் ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணமும் கட்டி இரண்டு மாதம் சென்றேன். பின்னர் அவர்களின் வழி காட்டுதலில்-பயிற்சியில் எனக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் விலகி விட்டேன்.
இந்த நிலையில் எனது வெற்றிக்கு முழு முதல் காரணமான இருந்த தோல்விகளுக்கும், மாதா, பிதா, குரு, தெய்வம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முகநூல் குழுக்கள் என அனைவருக்கும் இந்த வெற்றியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்.
உங்கள் ஆசியுடன் போட்டித் தேர்வில் நான் எனது அடுத்த பயணத்தைக் தொடங்குகிறேன்.
உங்கள் அன்பு சகோதரன்
- பிரபுதேவா.
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]
0 கருத்துகள்