பரிபாடல்

  • பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று.
  • தொல்காப்பியர் பரிபாட்டு அகப்பொருளில் வரும் என்று கூறுகிறார்.
  • பாவகையால் பெயர்பெற்ற நூல் பரிபாடல்
  • பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி பேரெல்லை 400 அடி
  • எட்டுத் தொகை நூல்களிலே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
  • பொருட்கலவை நூல் என்று கூறப்படுவது பரிபாடல்.
  • தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
  • எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்
  • எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு.
    1) பரிபாடல் 2) கலித்தொகை.
  • பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
  • பரிபாடல் என்ற நூல் எழுபது பாடல்களைக் கொண்டதாக இருக்கும்.
  • இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடலில் 22 பாடல்கள் மட்டுமே உள்ளன.
  • பரிபாடலைப் பாடிய புலவர்கள் 13 பேர்.
  • நல்லச்சுதனார், நன்னாகனார், கேசவனார், கண்ணாகனார், பித்தாமத்தர் போன்றோர் பரிபாடலுக்கு இசை வகுத்துள்ளனர்.
  • வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
  • கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
  • பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
  • பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
  • பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
  • எட்டுத்தொகை நூல்களில் பரிபாடலில் மட்டுமே நான், போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
  • “நல்லாள் கரைநிற்ப நான் குளித்த பைந்தடத்து’’ (6:87)
    • “கின்று’’ என்ற காலம் காட்டும் இடைநிலை முதன் முதலில் பரிபாடலில்தான் காணப்படுகிறது.
    “தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின்’’ - 22: 35

    • பாற்கடல் கடைந்தது, கருடன் தன் தாயின் துயர் களைந்தது, பிரகலாதன் கதை, முருகன் பிறப்பு, அவன் போர்க்கருவி பெற்றது, அகலிகை சாபம் போன்ற செய்திகள் முதன்முதலில் பரிபாடலில்தான் காண முடிகிறது. 
    • உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.
    • பதிற்றுப்பத்தில் பண் இல்லை.
    • பரிபாடலில் தாளம் இல்லை. 

      பரிபாடல் - பால்வீதி 10th Tamil Text Book Notes

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்