அவசர நிலைகள் | இந்திய அரசியலமைப்புச் சட்டம்

  • இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று
  1. தேசிய நெருக்கடி நிலை
  2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி 
  3. நிதி நெருக்கடி நிலை
  • தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - பிரிவு 352
  • தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி
  • தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்
  1. போர்
  2. போர் மூலம் அபாயம்
  3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு
  4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்
  5. உள்நாட்டுக் கலவரம்
  • தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.
  • 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி.
  • தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபின் பாராளுமன்றம் கூடிய பின் 30 நாட்களுக்குள் அங்கீகாரம் பெற வேண்டும்.
  • தேசிய நெருக்கடியின் போது ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை நீக்கலாம்

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி 

  • மாநிலங்களில் அரசியலமைப்பு செயல்படுத்த முடியாமல் சீர்குலையும்போது செயல்படுத்தப்படுவது ஜனாதிபதி ஆட்சி.
  • ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - பிரிவு 356
  • முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951
  • முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்.
  • ஜனாதிபதி ஆட்சியின்போது அந்த மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.
  • இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்.
  • இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

நிதி நெருக்கடி நிலை

  • நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து - பிரிவு 360
  • நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
  • நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
  • நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
  • 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
  • 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
  • நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை பிரிவு 21

கருத்துரையிடுக

0 கருத்துகள்