லோக்சபா (கீழ்சபை), ராஜ்ய சபா (மேல்சபை)

லோக்சபா (கீழ்சபை) - LOK SABHA

இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். இதில் 530 உறுப்பினர்கள் பல மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார்.

இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)

ராஜ்ய சபா (மேல்சபை) (RAJYA SABHA)

இந்த அவையின் அதிக பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250 ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும் சமூக அறிவியல் போன்றவற்றில் சிறந்த 12 பேர் ஜனாதிபதியால் நியாமனம் செய்யப்படுகின்றனர். 

ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில சட்ட மன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர்.

முப்பது வயதுக்கு குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். 

தற்போதைய ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்