பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,  தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்டம்
அறிவிக்கை (NOTIFICATION)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயர்:
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

2. பணியின் தன்மை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்ட பணிகளையும் மேற்பார்வையிடுதல்

3. ஊதியம்
ரூ.35,400 - 1,12,400 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

4. வயது
2020 ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

5. மொத்த பணியிடங்கள் : 80

6. விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.01.2021 பிற்பகல் 5.45 மணி வரை



கருத்துரையிடுக

0 கருத்துகள்