ராஷ்டிரிய கோகுல் திட்டம் (Rashtriya Gokul Mission Scheme)


நோக்கம் :
நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.

குறிக்கோள் : உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.

  • பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
  • இயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய
  • காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்

அமல்படுத்தும் அமைப்பு : கால்நடைகள் அபிவிருத்தி வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அமல்பாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது. 

நிதியளிப்பு : 100 சதவீதம் மானியம் அடிப்படையிலான நிதியளிப்பு உடையது இத்திட்டம்

இத்திட்டத்தின் கீழுள்ள துவக்கங்கள் :

  • ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடைகள் மையங்களை நிறுவுதல் - கோகுல் கிராம்.
  • உள்நாட்டு கால்நடைகளை வளர்ப்பவர்களின் சங்கத்தை நிறுவுதல் (கோபாலன் சங்)
  • உழவர்களுக்கு “கோபால் ரத்னா” விருதினை வழங்குதல், கால்நடை வளர்ப்பவர்களின் சங்கத்திற்கு “காமதேனு” விருதினை வழங்குதல்.
  • சிறந்த மூலவுயிர் திசுக்கள் தொகுதியின் களஞ்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு உதவுதல்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்