சாதி எதிர்ப்பு இயக்கங்கள் | ஜோதிபா பூலே

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

சாதி எதிர்ப்பு இயக்கங்கள்  | ஜோதிபா பூலே


ஜோதிபா பூலே
  • ஜோதிபா கோவிந்தராவ் பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார்.
  • அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார். 
  • சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார். 
  • குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். 
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார். 
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். 
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும்
  • விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார். 
  • அவர் எழுதிய நூலான குலாம்கிரி (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக்கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.
    Click & Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்