அயோத்திதாசப் பண்டிதர்

தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாசர்

தோற்றம்: 

  • சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம் ஆண்டு மே திங்கள்இருபதாம் நாள் பிறந்தார். 
  • இவரின் தந்தையார் பெயர் : கந்தசாமி.  
  • இயற்பெயர் : காத்தவராயன். 

சிறப்பு:  

  • அயோத்திதாசப் பண்டிதர் 'தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். 
  • இவர் அயோத்திதாசர் என்பவரிடம் கல்வி கற்றார்.
  • தம் ஆசிரியர் பெயரையே தம் பெயராக ஆக்கிக்கொண்டார். அவரின் ஆசிரியர் எழுதிய கவிதையை, தாம் பிற்காலத்தில் தொடங்கிய "ஒரு பைசாத் தமிழன்” எனும் இதழில் வெளியிட்டார். 
  • இவர் சித்த மருத்துவமும் பயின்றார்.

திருமணம்: 

  • இவர் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துக்கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார். 

புத்த நெறி: 

  • இவர் புத்த நெறியால் கவரப்பட்டார். 
  • புத்த மதக் கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துரைத்தார். 
  • தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டினார். 
  • தம் மகள்களுக்கு அம்பிகாதேவி, மாயாதேவி என்று பெயரிட்டார். 

சமூகப் பணி: 

  • இவர் மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பெற்றவர். 
  • எவரையும் சாதி பெயரை சொல்லி அழைப்பது தவறு என்றார். 
  • தாழ்த்தப்பட்டவர்களுக்குத் கல்வி வசதி, கல்வி உதவித்தொகை, கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுவேலை போன்றவற்றை போராடி பெற்று தந்தார்.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சென்னையில் ஐந்து இடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்” தொடங்கினார். 

இதழ்ப்பணி : 

  • அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழை வெளியிட்டார். அது 19.06.1907 முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன்தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது. 

புதிய தீபாவளி: 

  • எள்ளு செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தார். 
  • அதற்கு ஆதாரமாக ஜப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றார். 

இயற்றிய நூல்கள்: 

  • “புத்தரது ஆதிவேதம்”(28 காதைகள்) பாலி, ஆங்கிலம் ஆகிய மொழி துணையுடன் எழுதினார். 
  • இந்திரதேசத்து சரித்திரம். 
  • தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்தார். 
  • திருவாசகத்திற்கு உரை எழுதியுள்ளார். 

மறைவு: 

  • “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்” என்றார். 
  • 1914ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் நாள் மறைந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்