நந்திக் கலம்பகம்
நந்திமன்னன் வீரம்
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு
காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும்
இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே
சொற்பொருள்:
புயல் – மேகம்
பணை – மூங்கில்
பகரா – கொடுத்து
பொருது – மோதி
நிதி – செல்வம்
புனல் – நீர்
கவிகை – குடை
வானகம் - தேவருலகம்
இலக்கணக்குறிப்பு:
பொழிதருமணி – வினையெச்சம்
வருபுனல் – வினையெச்சம்
நிதிதருகவிகை – வினையெச்சம்
இவை இவை - அடுக்குத்தொடர்
நூல் குறிப்பு:
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
- கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
- கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
- கலம்பகம் பதினெட்டு உறுபுகளை கொண்டது.
புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்.
0 கருத்துகள்