7th Tamil முக்கூடற்பள்ளு

7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு
சொற்பொருள்:
  • தத்தும் புனல் – அலையெறியும் நீரும்
  • கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
  • மதோன்மத்தர் – சிவபெருமான்
ஆசிரியர் குறிப்பு:
  • இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
  • ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர்.
  • சந்த நயம் மிக்க நூல்.
  • திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
நூல் குறிப்பு:
  • நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை பற்றியது.
  • திருநெல்வேலியில் உள்ள “தன்பொருணை, சிற்றாறு, கோதண்டராம ஆறு” ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடம் “முக்கூடல்” ஆகும்.
  • முக்கூடலை “ஆசூர் வடகரை நாடு” என்றும் அழைப்பர்.
  • இதன் தென்பகுதியில் உள்ளது “சீவல மங்கைத் தென்கரை நாடு”.
  • தென்கரை நாட்டில் “மருதசீர்” வீற்றிருக்கும் ஊர் மருதூர்.
  • முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி.
  • இருவரையும் மணந்து திண்டாடும் பள்ளனின், வாழ்க்கை வளத்தை கூறுகிறது இந்நூல்.
அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சிதிரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்