12th Tamil | Mukkudal Pallu in tamil
சிற்றிலக்கியங்கள்
குறவஞ்சி
பரணி
தூது
கலம்பகம்
உலா
பள்ளு
காவடிச்சிந்து
அந்தாதி
பிள்ளைதமிழ்
12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு
- திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
- அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.
- சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சிய நூல்
- சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக முக்கூடற் பள்ளு தெரிகிறது.
- உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.
- மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல், மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப் பெற்றது பள்ளு இலக்கியமாகும்.
- சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.
- இந்நூலை இயற்றியவர் இன்னார் என அறியப்படவில்லை.
- இந்நூல் தோன்றிய காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்பர்.
அருஞ்சொற்பொருள்
- தயிர்க்கண்டம் = தயிர்க் கட்டிகள்
- மறுகுதல் = சுழலுதல்
- வான்சுழி வெள்ளம் = அதிகமான சுழித்தலுடன் ஓடிவரும் பெருவெள்ளம்
இலக்கணக்குறிப்பு
- வெண்தயிர் = பண்புத்தொகை
- காய, மாய = பெயரெச்சங்கள்
- நாழிகை வாரம் = உம்மைத் தொகை
- உரைத்திடும் சந்தனம் = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
- தாபதர் உள்ளம் = ஆறாம் வேற்றுமைத் தொகை
- செந்நெல் = பண்புத்தொகை
- சுழி வெள்ளம் = வினைத்தொகை
0 கருத்துகள்