காவடிச்சிந்து TNPSC General Tamil

 

  • காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று. 
  • உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. 
  • காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

  • தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். 
  • முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர். 
  • அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
சொல்லும் பொருளும்
புயம் - தோள்; 
வரை – மலை; 
வன்னம் – அழகு; 
கழுகாசலம் கழுகு மலை; 
துஜஸ் தம்பம் - கொடி மரம்; 
சலராசி - கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்; 
விலாசம் - அழகு; 
நூபுரம் - சிலம்பு; 
மாசுணம் – பாம்பு; 
இஞ்சி - மதில்; 
புயல் - மேகம்; 
கறங்கும் - சுழலும்.
இலக்கணக்குறிப்பு
தாவி - வினையெச்சம், 
மாதே - விளி 

பகுபத உறுப்பிலக்கணம்
வருகின்ற - வா(வரு) + கின்று + அ
வா - பகுதி, வரு எனத் திரிந்தது விகாரம்
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதி
திருப்புகழ் - திரு + புகழ்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். திருப்புகழ்
உயர்ந்தோங்கும் - உயர்ந்து + ஓங்கும்
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் உயர்ந்த் + ஓங்கும்.
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே உயர்ந்தோங்கும்.
நூல்வெளி
  • 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும். இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும். 
  • தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்; 
  • 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார். 
  • இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்