நூற்குறிப்பு
- பாடல்களின் எண்ணிக்கை : 391 கண்ணிகள்
- ஆசிரியர் : ஒட்டக்கூத்தர்
- மூவர் உலாவில் இடம் பெற்றுள்ள ஒரு நூல்
- விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் என்ற மூவர் மீதும் பாடப்பட் உலா நூல் மூவர் உலா
- இவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர்.
- இரண்டாம் ராஜராஜன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்த 391 கண்ணிகள் உள்ளன.
- “புயல்” என்ற மங்கலச் சொல்லால் இந்நூல் தொடங்குகிறது.
- உலா, கலிவெண்பாவால் பாடப்படும் இலக்கியம்
- ஒட்டக்கூத்தர் – கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சகன்
நூற் செய்திகள்
- சோழமன்னர்களின் வழிமுறை, செய்த போர்கள் அடைந்த வெற்றி, அளித்த கொடை பற்றிக் கூறுகிறது.
- இராஜராஜன் கருநிறத்தவன், அவன் பட்டத்து அரசி புவனமுழுதுடையாள்
- இராஜராஜனுக்கு வரராசன், கண்டன், சனநான் என்ற பட்டப் பெயர்களும் விளங்கின.
- அரசன் பெரும்பாலும் பாசறையிலேயே இருந்தால் “அயிற்படை வீரன்” எனச் சிறப்பிக்கப்படுகிறான்.
- பார் மடந்தை கைகளிலும், போர் மடந்தை தோளிலும், திருமடந்தை விழிகளிலும், கலை மடந்தை அவன் செவிகளிலம் வாழ்வதாகப் பாடியுள்ளார்.
- திருவெம்பாவை, கச்சிக் கற்றளி குறித்த குறிப்புகளும் உள்ளன.
- கொப்பத்துப்பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கத்துப்பரணி ஆகிய மூன்று நூல்களை குறிப்பிடுகிறது.
- இதன் ஒவ்வொரு கண்ணிக்கும் அரசன் ஆயிரம் பொற்காசுகளைத் தந்து பாராட்டினான்.
0 கருத்துகள்