மனோன்மணியம் | 11th Tamil Text Book-1

TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்

மனோன்மணீயம்


மனோன்மணீயம்  | 11th Tamil Text Book
  • 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம்
  • மொழிப்ப ற்றையும் நாட்டுப்ப ற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.
  • நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த மனோன்மணீயம் என்னும் இந்நாடக நூல், காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. 
  • இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ளது இந்நூல்.

சொல்லும் பொருளும்
கடிநகர் – காவல் உடைய நகரம்
காண்டி – காண்க; 
பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்; 
ஆசு இலா - குற்றம் இலாத; 
தோட்டி – துறட்டி; 
அயம் – ஆடு, குதிரை; 
புக்க விட்டு – போகவிட்டு.
சீரியதூளி – நுண்ணிய மணல் ; 
சிறுகால் – வாய்க்கால் ; 
பரல் – கல்; 
முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை ; 
அண்டயோனி – ஞாயிறு; 
சாடு – பாய்; ஈட்டியது – சேகரித்தது; 
எழிலி – மேகம்
நாங்கூழ்ப்புழு – மண்புழு; 
ஓவா-ஓயாத;
பாடு-உழைப்பு; 
வேதித்து – மாற்றி.
Click & Download Full Pdf

இலக்கணக் குறிப்பு:
கடி நகர், சாலத் தகும் – உரிச்சொற்றொடர்கள்;
உருட்டி – வினையெச்சம்; 
பின்னிய,முளைத்த – பெயரெச்சங்கள்; 
இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்;
பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ; 
ஆசிலா, ஓவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்;
ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று; 
பார்த்துப் பார்த்து, நில் நில், உழுதுழுது – அடுக்குத் தொடர்கள்; 
வாய்க்கால் – இலக்கணப் போலி (முன் பின் தொக்கியது); 
செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்; 
மலையலை, குகைமுகம் - உவமைத்தொகைகள்; 
நெறுநெறு - இரட்டைக்கிளவி; 
புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்; காலத்தச்சன் – உருவகம்;
ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று; 
புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை; 
தங்குதல் – தொழிற்பெயர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்