பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
இன்னா நாற்பது
ஆசிரியர் : கபிலர்
காலம் : 4 ஆம் நூற்றாண்டு
மொத்தப் பாடல்கள் : 1+40 (இன்னிசை வெண்பாக்கள்)
துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல்
மொத்தம் 164 இன்னாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
மேற்கோள்
“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா”
“தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”
“ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா”
“குழவிகள் உற்றபிணி இன்னா”
“இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு”
0 கருத்துகள்