- உலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் செவ்வியல் இசைமட்டுமன்று, ஏட்டில் எழுதப்படாமலும் கருவிகளால் இசைக்கப்படாமலும் காற்று முழுவதும் கலந்திருப்பதும் இசைதான்.
- குயில்பாட்டு என்ற பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.
- பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்.
- பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
- அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.
- தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
- இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச் செய்தவர்.
- சுதேசமித்திரன் இதழாசிரியராகச் சில நாள் விளங்கியவர்.
- பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடைநூல்களையும் எழுதியவர்.
சொற்பொருள்
- வாரி = கடல்
- கோற்றொடியார் = பெண்கள் (உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
- குக்குவென = நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
- பண்ணை = வயல்வெளி
- வேய் = மூங்கில்
- வேயின்குழல் = புல்லாங்குழல்
- பண்கள் = இசைப்பாட்டு
இலக்கணக்குறிப்பு
- கானப்பறவை = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- வளைக்கரங்கள் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- கலகலென, குக்குவென = இரட்டைக்கிளவி
- நீரோசை = ஆறாம் வேற்றுமைத் தொகை
- பெருங்கடல் = பண்புத்தொகை
- பழகு, பாட்டு = வினைத்தொகை
- பாவியேன் = தன்மை ஒருமை வினைமுற்று
0 கருத்துகள்