அப்பர் - திருநாவுக்கரசர்
- திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.
- இவரது தமக்கை திலகவதியார்.
- வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.
- திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.
- திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.
- திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
- முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
- மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.
- என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.
- தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.
சமய முன்னோடிகள் - சுந்தரர், மாணிக்கவாசகர்
0 கருத்துகள்