யாப்பிலக்கணம்
- கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.
- செய்யுள்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுவது யாப்பிலக்கணம் ஆகும்.
- உறுப்பியலில் யாப்பின் ஆறு உறுப்புகளாக விளக்கப்படுபவை :
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
எழுத்து
- யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் மூவகைப்படும். அவை - குறில், நெடில், ஒற்று.
- எழுத்துகளால் ஆனது `அசை’ எனப்படும்.
அசை
- ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும்.
- அசை இருவகைப்படும்.
1) நேரசை 2) நிரையசை
- அசைப் பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை
சீர்
- ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் சீர் ஆகும்.
- பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது சீர் ஆகும்.
- சீர் நான்கு வகைப்படும். அவை
1) ஓரசைச்சீர் 2) ஈரசைச்சீர்
3) மூவசைச்சீர் 4) நாலசைச்சீர்
- ஈரசைச் சீர்களுக்கு `இயற்சீர்’ `ஆசிரிய உரிச்சீர்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு.
- காய்ச்சீர்கள் `வெண்சீர்கள்’ என அழைக்கப்படுகின்றன.
- வெண்பாவில் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும். பிற சீர்கள் வாரா. தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும். பிற தளைகள் வாரா.
0 கருத்துகள்