இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு 


பொதுத் தேர்வு 2019 

விளம்பர எண் :1/2019      நாள் : 06.03.2019


 1. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2019-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி வி்ண்ணப்பத்தினை (Online application) வரவேற்கிறது.

2. விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

3. இத்தேர்விற்குரிய முழுமையான அறிவிக்கை மற்றும் தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்பிடுவதற்கு முன்னர், இக்குழும இணையதளத்திலுள்ள முழுமையான அறிவிக்கை, தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனும் அறிவுரையிளையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ளவைகளை முழுமையாகப் படித்த பின்னர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

4. காலிப்பணியிடங்கள் :8826.

துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

கருத்துரையிடுக

1 கருத்துகள்