ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக கூறப்பட்டது..


இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12 வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையதளம் சரிவர வேலைசெய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்த நிலையிலும், விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சலுக்கு வரும் உறுதித்தகவலிலும் காலதாமதம் ஏற்பட்டதாலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Hey, I think your website might be having browser compatibility issues.
    When I look at your website in Chrome, it looks fine but when opening in Internet Explorer,
    it has some overlapping. I just wanted to give you a quick heads up!
    Other then that, excellent blog!

    பதிலளிநீக்கு