ஆனந்தரங்கர் நாட்குறிப்பு | TNPSC General Tamil Study Notes

TNPSC Group 4, Group II | General Tamil Study Notes
ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடிகள்.
 
வரலாற்று ஆவணம்:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றுகிறது.
இளமைக்காலம்:
ஆனந்தரங்கர் சென்னை பிரம்பூரில் (பெரம்பூர்) 1709ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர்.
    இவரின் தந்தை = திருவேங்கடம்
    “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.

புதுவைக்கு செல்லுதல்:
    இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

துபாசி:
    ஆனந்தரங்கர் பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
    “தூப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:
    ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
    அரசியல், பொருளாதாரம், சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது.
    ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.

வரலாற்றுச் செய்திகள்:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.

வணிகச் செய்தி:
    ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
    துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
    புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.  அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் போலவும், தேவாமிர்த்ததைச் சுவைத்தது போலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.

தண்டனைச் செய்தி:
    நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன. திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்படுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்