தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் -
தமிழில் கடித இலக்கியம்
மு.வ.வின் கடித வரிகள் :
- தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே.
- நீ தேட வேண்டுவது தொண்டு.
- தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
"தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே. நீ தேடவேண்டுவது தொண்டு. தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து" எனும் வரிகள் மு வரதராசனாரின் "தம்பிக்கு" என்ற கடிதத்தில் இடம்பெற்றுள்ளது.
நேருவின் கடித வரிகள்:
- புத்தகம் வாசிப்பதை கடமையாக ஆக்குதல் கூடாது கட்டாயப்படுத்தவும் கூடாது அப்படி செய்தால் புத்தக வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது
அண்ணாவின் கடித வரிகள் :
- பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க தமிழகம்!
காந்தியின் கடித வரிகள்:
- தாய்மொழியில் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றிஇருப்பார்கள்.
- பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
0 கருத்துகள்