சமச்சீர்க்கல்வி தமிழ்ப்பாடத்திலிருந்து தொகுக்கப்பட்ட
TNPSC, TET, PGTRB, UGTRB, TN Police Exams
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
குற்றியலிகரம்
- குற்றியலிகரம் = குறுமை+இயல்+இகரம் எனப் பிரிக்கலாம்.
- குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.
- இயல் என்றால் ஓசை என்பது பொருள்.
- இகரம் என்றால் 'இ' என்னும் எழுத்து.
- இகரம் தன் ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் ஆகும்.
- நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இகரமாகத் திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
(எ.கா)
நாகு + யாது = நாகியாது
வீடு + யாது வீடியாது
வண்டு + யாது = வண்டியாது
வரகு + யாது = வரகியாது
என்பது+யாது = என்பதியாது
'மியா'என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரம் (மி=ம்+இ) தன் மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும். இதுவும் குற்றியலிகரம் எனப்படும்.
(எ.கா) கேண்மியா, சென்மியா
0 கருத்துகள்