அடக்கமுடைமை
2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
விளக்கம்: அடக்கத்தை ஒரு செல்வமாக மதித்துக் காக்க வேண்டும்.அடக்கத்தை உயிரினும் மேலாக கருதுவர்.
3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.
விளக்கம்: அறிய வேண்டியவற்றை அறிந்து நடப்பதே அறிவுடைமை ஆகும். அவ்வாறு நடந்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும்.
மலையினும் மாணப் பெரிது.
5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
விளக்கம்: ஒருவன் எல்லாரையும் பணிந்து நடந்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும். செல்வத்தை விட மிகப் பெரிய செல்வமாக கருதப்படும்.
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம்: ஒரு பிறவியில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால்,அது அவனுக்கு மறு பிறவியிலும் நல்ல பயன் தரும்.
7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவன் தன் நாவை அடக்கி காக்க வேண்டும்.அவ்வாறு காக்க விட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்புறுவர்.
8. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம்: ஒருவன் தீய சொற்களால் பிறரை துன்பப் படுத்தினால், அது அவனுக்கு வரும் நன்மையும் தீமையாக முடியும்.
9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
விளக்கம்: தீயினால் சுட்டபுண் உடம்பில் ஆறி விடும்.ஆனால் நாவினால் பேசுவது மனத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.
10. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
விளக்கம்: யாரிடமும் கோபம் கொள்ளாது அடக்கம் உடையவனாக வாழ்ந்தால், அறக்கடவுள் காலம் பார்த்துக் காத்திருப்பார்.
0 கருத்துகள்